தமிழகம்
சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு…!
எந்த வித ஆதாரமும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புவதாக சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா கூட்டணி அரசை, ஏக்நாத் ஷிண்டே கவிழ்த்ததைப் போல, தமிழகத்தில் தி.மு.க அரசை கவிழ்த்து விடுவார்; பெரும்பாலான ‘டாஸ்மாக் பார்’களை செந்தில்பாலாஜி நடத்தி வருவதால் தி.மு.க., வினர் விரக்தியில் உள்ளனர் என, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவதூறு கருத்துக்களை பரப்புவதால் சவுக்கு சங்கரை அவதுாறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login