தமிழகம்
அடேங்கப்பா..! அனைத்து வீடுகளிலும் அமைச்சா் செல்போன் நம்பா்..!
புதுச்சேரி அடுத்த ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாத உதவி தொகைக்கான அடையாள அட்டை, பிரதமர் கல் வீடு கட்டும் திட்டத்திற்கான பயனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றை அமைச்சர் சாய் சரவணன் பத்துகண்ணுவில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று வழங்கினார்.
அப்போது பயனாளிகள் மத்தியில் பேசிய அவர்,ஓட்டு கேட்பதற்கு வீடு வீடாக வந்தது போல மக்களுக்கு வீடு வீடாக தேடி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக கூறினார்.தான் தப்பு செய்தால் தட்டி கேட்க ஓட்டு போட்ட மக்களுக்கு உரிமை உள்ளது.அதனால்தான் காலண்டரில் தனது தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளேன்.. தவறு செய்தால் என்னிடம் தொலைபேசியில் நேரடியாக பேசலாம் என குறிப்பிட்டார்.