அரசியல்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது!
தமிழகத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்து வருபவர் செந்தில் பாலாஜி. இவரது வீட்டில், நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக, துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
மேலும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான காரணங்கள் குறித்தும், எந்த அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை அறிந்த திமுக அமைச்சர்கள் பலரும், மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
You must be logged in to post a comment Login