Connect with us

Raj News Tamil

நடமாடும் தகன மேடை..! எரிவாயு மூலம் சாம்பலாகும் உடல்கள்..!

தமிழகம்

நடமாடும் தகன மேடை..! எரிவாயு மூலம் சாம்பலாகும் உடல்கள்..!

தூத்துக்குடி மாநகரில் கடந்த 17ஆம் தேதி பெய்த மிக கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வெள்ளத்தில் தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள எரிவாயு தகனமேடையும் மழை வெள்ளத்தில் மூழ்கியது.

இதன் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவித்து வந்தனர். சிலர், உடல்களை வெளியூர் கொண்டு சென்று அடக்கம் செய்து வந்தனர்

இந்நிலையில் தூத்துக்குடியில் மாஸ் அமரர் ஊர்தி சேவை மையம் சார்பில் நடமாடும் எரிவாயு மேடை கோயம்புத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்டு இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணி நடைபெற்றது.

More in தமிழகம்

To Top