பிரதமர் மோடி வருகை…சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்க வாய்ப்பு

பிரதமர் மோடி நாளை பிற்பகலில் சென்னை வர இருக்கிறார். இதனால் அவர் செல்லும் வழிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை போக்குவரத்து காவலர்கள் வெளியிட்ட தகவலின்படி, ஜிஎஸ்டி சாலை முதல் அண்ணாசாலை ஒய்எம்சிஏ வரையும், நந்தனம் முதல் தியாகராய நகர் வரையும் பிற்பகல் 3மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்புள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை, அண்ணா சாலை, எஸ்.வி.பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, தியாகராய நகர் பகுதி சாலைகளை பிற்பகலில் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தியாகராய நகர், வெங்கட நாராயணா சாலை, ஜி.என்.செட்டி சாலை, வடக்கு போக் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதிகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News