Connect with us

Raj News Tamil

வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி: பாஜக நிர்வாகி கைது!

தமிழகம்

வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி: பாஜக நிர்வாகி கைது!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்பவானோடை மேலக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (பாஜக மாவட்ட பொதுச் செயலாளர்) என்பவர் இடும்பாவனம் காலனி தெருவை சேர்ந்த சாந்தி என்பவரின் மகன் ராம்குமாருக்கு கிராம உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி பல தவணைகளாக 2 லட்சத்து 65 ஆயிரம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜேந்திரனிடம் சாந்தி வேலை குறித்து கேட்டுள்ளார்.

ராஜேந்திரன் எந்தவித பதிலும் அளிக்காத காரணத்தினால் இது குறித்து சாந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த நிலையில் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஆனந்தவல்லி என்பரிடமும் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More in தமிழகம்

To Top