ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நயன்தாரா, ஊர்வசி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை, இயக்குநர் சுந்தர் சி இயக்க உள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை, தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, இந்த திரைப்படத்தை, 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில், மிகவும் பிரம்மாண்டமாக தயாரிப்பதற்கு, படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.
இதனை வைத்து பார்க்கும்போது, இதுதான், சுந்தர் சி-யின் வாழ்க்கையிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.