Connect with us

Raj News Tamil

ஆளுநர் ரவிக்கு கருப்பு கொடி காட்டிய 200க்கும் மேற்பட்டோர் கைது..!

தமிழகம்

ஆளுநர் ரவிக்கு கருப்பு கொடி காட்டிய 200க்கும் மேற்பட்டோர் கைது..!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கவுள்ளார். பின்னர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பல்கலைக்கழக துணை வேந்தரை சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கருப்புக் கொடி காட்டிய இந்திய மாணவர் சங்கத்தினர், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த ஆய்வு கூட்டத்தை முடித்த பின்னர் சாலை மார்க்கமாக சேலத்திலிருந்து கோவைக்கு செல்வதால் ஆளுநர் ரவி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top