75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

18 மாதங்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17,595 பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19260 ஆசிரியர் பணியிடங்களும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3041 பணியிடங்களும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.

அதாவது வரும் 2026க்குள் ஜனவரி மாதத்திற்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதைத் தவிர சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் காலியாக இருக்க கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும்.

மொத்தமாக 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

RELATED ARTICLES

Recent News