திருவண்ணாமலை அருகே 3 குழந்தைகளுடன் தாய் ஆற்றில் குதித்ததில் 3 குழந்தைகளும் உயிரழப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூலி தொழிலாளி பரசுராமன் அமுதா தம்பதியனர். இவர்களுக்கு மகன்கள் நிலவரசு, குறளரசு, மகள் யாஷினி என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தாய் அமுதா திடீரென தனது மகன்களான நிலவரசு, குறளரசு மற்றும் 7 மாத கைக்குழந்தையான யாஷினி ஆகிய மூன்று பேரையும் அழைத்துக்கொண்டு தென்பெண்ணை ஆற்றங்கரைக்கு வந்துள்ளார். மழைக்காலம் என்பதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிந்துள்ளது. சற்றும் எதிர்பார்காத விதமாக திடீரென தனது 3 குழந்தைகளையும் தனது இடுப்பில் துணியால் கட்டிக்கொண்டு ஆற்றுக்குள் குதித்துள்ளார். நீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த தாய் மற்றும் குழந்தைகளை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று குழந்தைகளும் உயிரழந்து விட்டதாக தெரிவித்தார்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/KIds.jpg)
அந்த மூன்று உடலைகளையும் பார்த்து உறவினர்கள் கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.மேலும் தாய் அமுதா சுய நினைவின்றி இருப்பதாக தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணாபுரம் போலிசார் 3 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தொடர்ந்து விசாரணை நடத்திய போலிசார் ஆற்றில் குதித்தற்கு குடும்ப தகராறு காரணமாக அல்லது வேறு ஏதவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை ஏற்கொண்டு வருகின்றனர். மேலும் அமுதா சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,அவருக்கு நினைவு திரும்பிய பின்னர் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.