Connect with us

Raj News Tamil

துப்பட்டாவால் 2 வயது குழந்தையை கொலை செய்த தாய்..!

தமிழகம்

துப்பட்டாவால் 2 வயது குழந்தையை கொலை செய்த தாய்..!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கந்தன் பாளையம் பகுதியை சேர்ந்த சக்தி(27), அகல்யா(19) தம்பதிக்கு 2 வயதில் சசிதரன் என்ற குழந்தையும் உள்ளது. இந்நிலையில், குழந்தை இறந்து கிடப்பதாக கூறி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அகல்யா கூறியுள்ளார்.

இதையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக கூறி, உடலை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். குழந்தை சாவில் சந்தேகம் அடைந்த போலீசார், அகல்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் கழுத்தை, தனது துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததை அகல்யா ஒப்புக்கொண்டார்.

மேலும் சிறு வயதில் திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொண்டதால், அக்கம்பக்கத்தினர் தகாத வார்த்தைகளால் பேசியதால், குழந்தையை கொன்றதாக அகல்யா போலீசாரிடம் கூறியுள்ளார்.

More in தமிழகம்

To Top