Connect with us

Raj News Tamil

பசியால் அழுத 2 மாத குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த தாய்..!! அதிர்ச்சி சம்பவம்

today tamil news

உலகம்

பசியால் அழுத 2 மாத குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த தாய்..!! அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 37 வயதான பெண் தான் ஹானஸ்டி டி லா டோர்ரே. இவர் தனது 7 வார குழந்தையுடன் காரில் சென்றுள்ளார். அப்போது குழந்தை பசியால் அழுதுள்ளது.

குழந்தையின் அழுகையை நிறுத்த முயற்சி செய்தும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த குழந்தையின் தாய், பால் பாட்டிலில் மதுபானத்தை ஊற்றி குழந்தையின் வாயில் வைத்துள்ளார்.

அதனை குடித்த குழந்தை சிறுதுநேரத்தில் மயங்கி விட்டது. இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட போலீசார் காரை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது குழந்தைக்கு மது கொடுத்தது தெரிய வந்தது.

இதன் பின்னர், போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த நயவஞ்சக செயலை செய்த தாயை கைது செய்து, அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 49 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

More in உலகம்

To Top