இந்தியா
சூட்கேசில் தாயின் சடலம்…போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பெண்..அதிர்ச்சி அடைந்த போலீஸ்
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 35 வயதான பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் தாய் இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த அந்த பெண் கத்தியால் தனது தாயை குத்தியுள்ளார்.
பிறகு தாயாரின் உடலை ஒரு சூட்கேசில் வைத்து அந்த சூட்கேசுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். சூட்கேசை திறந்து பார்த்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அந்த பெண்ணிடம் விசாரித்த போது தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login