தமிழகம்
பெட்ரோல், டீசல் போட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி..!!
புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோலில் மழை நீர் கலந்திருப்பதால், ஒருசில பெட்ரோல் நிலையங்களில் அவற்றை விநியோகம் செய்யவில்லை.
பெட்ரோல், டீசலில் மழை நீர் கலந்திருக்கும் என்பதால், உரிய முறையில் பரிசோதித்த பிறகே வாடிக்கையாளர்களுக்கு விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.