Connect with us

Raj News Tamil

திருடப்பட்ட ரூ.2 லட்சம்.. எம்.பி. நவ்நீத் ராணாவின் வீட்டு பணியாளர் மீது காவல்துறையில் புகார்!

இந்தியா

திருடப்பட்ட ரூ.2 லட்சம்.. எம்.பி. நவ்நீத் ராணாவின் வீட்டு பணியாளர் மீது காவல்துறையில் புகார்!

தமிழ் சினிமாவில், அம்பா சமுத்திரம் அம்பானி என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நவ்நீத் ராணா.

இவர் கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில், மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு, வெற்றி அடைந்திருந்தார். தற்போது, பாஜகவின் சார்பில், அதே தொகுதியில் களம் கண்டார்.

பட்னேரா, அமராவதி, தியோசா, தர்யாபூர், மெல்கட் மற்றும் அசல்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய இந்த நாடாளுமன்ற தொகுதியில், கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி அன்று, இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், மும்பையில் கர் என்ற பகுதியில் உள்ள நவ்நீத் ராணாவின் வீட்டில், பணியாளராக வேலை செய்து வந்த அர்ஜூன் முகியா, அவரது வீட்டில் இருந்து ரூபாய் 2 லட்சத்தை திருடியுள்ளதாக, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள காவல்துறையினர், “நவ்நீத் ராணா வழங்கிய புகார், கர் காவல் நிலையத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. அர்ஜூன் முகியா என்பவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். நவ்நீத் ராணாவின் வீட்டில் இருந்து ரூபாய் 2 லட்சத்தை திருடிய பிறகு, அவர் தலைமறைவு ஆகிவிட்டார்” என்று கூறியுள்ளனர்.

More in இந்தியா

To Top