வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு

வங்கதேசத்தில் கடந்த இரு மாதமாக நடைபெற்ற கலவரங்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகினர். இந்தக் கலவரத்தின்போது ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு அடாபூர் காவல்நிலையத்தில் நடந்து வருகிறது. இந்தக் கொலை வழக்கில் சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வங்கதேச கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் நஜ்முல் ஹுசைன் என பல முக்கிய நபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

கலவரத்துக்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் ஷகிப் அல் ஹசன். தற்போது 37 வயதாகும் ஷகிப் அல் ஹசன் வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News