சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற மர்ம நபர்கள்!

சென்னை பெரம்பூர் ராகவன் தெருவில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் மெஷின் கதவினை உடைத்து பிறகு ஏடிஎம் மெஷினையும் உடைத்து நேற்று (செப்15) இரவு மர்ம நபர்கள் ஏடிஎம்மில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

ஏடிஎம் மிஷினில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் ஒலி எழுப்பியதால் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்த மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.

ஏடிஎம் மிஷினில் அலாரம் ஒலித்த தகவல் அறிந்த பெரம்பூர் செம்பியம் போலீசார் உடனடியாக ஏடிஎம் மெஷின் உள்ள இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தியுள்ளனர்.

பணம் செலுத்தும் டெபாசிட் மிஷினை மர்ம நபர்கள் உடைத்து உள்ளதை போலீசார் உறுதி செய்த நிலையில் ஏடிஎம் மிஷினில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைபற்றி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News