சினிமா
நாட்டாமை பட டீச்சர் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சரத்குமார், குஷ்பு, மீனா ஆகியோர் நடிப்பில், கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாட்டாமை. பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், சரத்குமாருக்கு பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.
இந்த படத்தில், டீச்சர் கதாபாத்திரம் ஒன்றில் நடித்து, பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை ராணி. இந்த படத்திற்கு பிறகு, கர்ணா, அவ்வை சண்முகி, ஜெமினி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
சினிமாவில் படவாய்ப்புகள் குறைந்ததால், தற்போது சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்து வருகிறார். இவருடைய தற்போதைய புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. “இவர் தான் நாட்டாமை பட டீச்சரா” என்றும் ஆச்சரியமாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login