Connect with us

Raj News Tamil

“தேசிய விருது கொடுப்பதில் பாரபட்சம்” – ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட் வைரல்!

சினிமா

“தேசிய விருது கொடுப்பதில் பாரபட்சம்” – ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட் வைரல்!

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மொழியிலும் எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு, மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல், நேற்று மாலை வெளியானது. ஆனால், பல்வேறு சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கு, விருது வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது.

இதனை அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள், ஆதங்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய விருது வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, வைரலாக வருகிறது. அதாவது, 2017-ஆம் ஆண்டு தேசிய விருது வழங்கப்பட்டபோதும், இதே போல் தான் நடந்தது.

அப்போது, கொதித்தெழுந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தேசிய விருதை தேர்வு செய்யும் நடுவர்கள், பாரபட்சத்துடன் நடந்துக் கொள்வதாக கூறியிருந்தார்.

இந்த ட்வீட், தற்போதுள்ள சூழலுக்கு பொருத்தமாக இருப்பதால், அதனை நெட்டிசன்கள் தேடி எடுத்து, வைரலாக்கி வருகின்றனர்.

More in சினிமா

To Top