சினிமா
“சாப்பாடு கூட தரல” – பேட்ட பட நடிகர் மீது பகீர் குற்றச்சாட்டு! கதறி அழுத பணிப் பெண்!
பாலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நவாசுதீன் சித்திக். இவர், தமிழில் பேட்ட படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து, அசத்தியிருந்தார். சினிமாவில் பெரிய ஜாம்பவனாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில், பல்வேறு சிக்கல்களை அவர் சந்தித்துக் கொண்டே வருகிறார்.
அந்த வகையில், இவரது வீட்டுப் பணிப்பெண், நவாசுதீன் குறித்து,அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளாா. அதாவது, நவாசுதீன் வீட்டில் பணிப்புரிந்து வந்த பெண் ஒருவருக்கு, வெளிநாட்டில் மேனேஜர் வேலை வாங்கி தருவதாக, அவர் உறுதியளித்துள்ளார்.
ஆனால், அங்கு சென்ற அந்த பெண்ணுக்கு, மேனேஜர் வேலை வழங்காமல், நவாசுதீனின் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சரியாக உணவு கூட வழங்கப்படுவதில்லை.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தையும் வீடியோ மூலம் கூறியிருந்த அந்த பணிப்பெண், அதே வீடியோவில் கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login