அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் படத்தின் மூலம், நடிகை நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமானார்.
இந்த படத்திற்கு பிறகு, இந்தியில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள், அவருக்கு குவிந்து வருகிறது. ஆனால், சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நயன்தாரா நடித்து வருகிறார்.
இவ்வாறு இருக்க, பத்மாவதி படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் புதிய படத்தில், நடிகை நயன்தாரா நடிக்க உள்ளாராம்.
இந்த தகவல், அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.