“சூப்பர் Mom-களுக்கு வாழ்த்துக்கள்” – புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து சொன்ன நயன்!

உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் உலகிற்கு கொண்டு வருவது தெய்வம் என்று சொல்வார்கள். இதனை நாத்தீகர்களும் ஒத்துக் கொள்ள தான் வேண்டும். ஆம், தாய் என்ற தெய்வம் தான் நமக்கு உயிர் கொடுத்து, போராடி இந்த உலகிற்கு நம்மை அழைத்து வருகின்றனர்.

இவர்களது சிறப்பை போற்றும் வகையில், இன்று உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. பலரும் தங்களது தாயின் புகைப்படங்களை பதிவிட்டு, வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். மேலும், தன்னுடைய குழந்தைகளின் புகைப்படத்தையும், அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்களும், அவருக்கு தங்களது அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இயக்குநர் விக்னேஷ் சிவனை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட நடிகை நயன்தாரா, வாடகை தாய் முறையின் மூலம், இரட்டை குழந்தைகளை சமீபத்தில் பெற்றெடுத்தார்.

இந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு, இன்னொரு பதிவை நயன்தாரா வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்” என்று பதிவு செய்து, தன்னுடைய குழந்தைகள் உடன் உள்ள இன்னொரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News