“நான் இழந்துவிட்டேன்” – நயனின் இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் கடந்த 20-ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நயன்தாரா. இவர், சமீப காலமாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இதற்கான காரணம் என்னவென்று புரியாமல், ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று இன்னொரு பதிவை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நான் முக்கியமான ஒன்றை இழந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள், மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதாவது, எதற்காக இந்த பதிவை வெளியிட்டார்? எதை இழந்துவிட்டார்? இவ்வாறு பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஒருசிலர், இது குளிர்பான விளம்பரத்திற்காக பதிவிடப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால், உண்மையான காரணத்தை, நயன்தாராவே விளக்கும்போது தான் தெரியவரும்…,

RELATED ARTICLES

Recent News