சினிமா
ப்ளாக் பஸ்டர் இயக்குநருடன் இணையும் நயன்தாரா?
![](http://rajnewstamil.com/wp-content/plugins/a3-lazy-load/assets/images/lazy_placeholder.gif)
Published on
ரஜினி, அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன், இணைந்து நடித்தவர் நயன்தாரா.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், சமீப காலங்களாக, தொடர் தோல்விப் படங்களை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், இந்த தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ப்ளாக் பஸ்டர் இயக்குநருடன், இணைவதற்கு, நயன்தாரா முடிவு செய்துள்ளார்.
அதாவது, குரங்கு பொம்மை, மகாராஜா ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் நித்திலன் சுவாமி நாதன், அடுத்து இன்னொரு படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தில் தான், நயன்தாரா நடிக்க உள்ளாராம். இப்படத்தில் நடிப்பதற்கு, நடிகை த்ரிஷாவிடமும், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Continue Reading
Related Topics:nayanthara, nayanthara next movie, nithilan swaminathan
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)