Connect with us

Raj News Tamil

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை – ப.சிதம்பரம்

தமிழகம்

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை – ப.சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கூடுதல் சுகாதார நிலையம் கட்டப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர் மெய்யநாதன், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உட்பட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, நீட் தேர்வு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ப.சிதம்பரம், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும், பிற மாநிலங்கள் நீட் தேர்வை வைத்துக் கொள்ளட்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு இல்லாமலே புகழ்பெற்ற பல்வேறு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

More in தமிழகம்

To Top