இந்தியா
நீட் முறைகேடு : குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை
கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. நாடாளுமன்றத்திலும் நீட் முறைகேடு விவகாரம் எதிரொலித்தது. மேலும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியை சேர்ந்த பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக குஜாரத்தில் 7 இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 2 பேரை சிபிஐ கைது செய்த நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)