இந்தியா
பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் விவசாயிகளின் போராட்டம்!
விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை கைவிடுமாறு விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 3 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து விவசாய சங்கங்கள் நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியை சுற்றுயுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.