Connect with us

Raj News Tamil

முத்தரப்பு பேச்சுவார்த்தை தேதி அறிவிப்பு! – போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்

தமிழகம்

முத்தரப்பு பேச்சுவார்த்தை தேதி அறிவிப்பு! – போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தம் சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 19ம் தேதி நடைபெறும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், முதல்வருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஜனவரி 19 ஆம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன்பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும்.

கருணை அடிப்படையில் 800-க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்துக் கழகங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் மற்றொரு கோரிக்கையான புதிய ஓட்டுநர், நடத்துநர்களை பணிக்கு எடுக்க வேண்டும் என்பதும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிலைமையை பொருத்து கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

More in தமிழகம்

To Top