Connect with us

Raj News Tamil

நேரு செய்த சிறப்பான பணிக்கு தான் நினைகூரப்பட்டது: ராகுல் காந்தி!

இந்தியா

நேரு செய்த சிறப்பான பணிக்கு தான் நினைகூரப்பட்டது: ராகுல் காந்தி!

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம், பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

டெல்லியின் தீன் மூர்த்தி பவன் கட்டடத்தில் இயங்கி வரும் இந்த அருங்காட்சியகக் கட்டடத்தில்தான் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாகர்லால் நேரு தங்கியிருந்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு அந்தக் கட்டடத்தில் நூலகமும், இந்திய விடுதலைப் போராட்டம் மற்றும் இந்திய வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பை உணர்த்தும் வகையில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டது.

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ராகுல் காந்தியிடம், நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, நேரு அவர்கள் அவர் செய்த சிறப்பான பணிகளால்தான் நினைவுகூரப்படுகிறாரே தவிர, வெறும் அவரது பெயரால் அல்ல என்று கூறினார்.

More in இந்தியா

To Top