Connect with us

Raj News Tamil

பொன்னியின் செல்வன் படத்தால் சிக்கலில் சிக்கிய தனுஷ்!

சினிமா

பொன்னியின் செல்வன் படத்தால் சிக்கலில் சிக்கிய தனுஷ்!

மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில், பிரம்மாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் வரும் 30-ஆம் தேதி அன்று, பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளதால், பெரும் அளவிலான திரைகளில் படத்தை வெளியிட, திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்காரணமாக, 29-ஆம் தேதி வெளியாக உள்ள தனுஷின் நானே வருவேன் திரைப்படத்திற்கு, குறைவான திரைகளே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, 65 சதவீத திரையரங்குகள் பொன்னியின் செல்வன் படத்திற்கும், 35 சதவீத திரையரங்குகள் நானே வருவேன் திரைப்படத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறைவான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், நானே வருவேன் திரைப்படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், படத்தின் Review-களை பொறுத்து திரையரங்க எண்ணிக்கை மாற வாய்ப்பு இருப்பதாகவும், கூறப்பட்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top