Connect with us

Raj News Tamil

‘செல்பி’ எடுக்கும் ஆசையில் புதுமண தம்பதி பலி; காப்பாற்ற சென்றவரும் பலி!

இந்தியா

‘செல்பி’ எடுக்கும் ஆசையில் புதுமண தம்பதி பலி; காப்பாற்ற சென்றவரும் பலி!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சேர்ந்த சித்திக் (29) என்பவருக்கு, நவுபியா (25) என்பவருடன் ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் புதுமண தம்பதி விருந்துக்காக பாரிப்பள்ளியை அடுத்த பள்ளிக்கால் என்ற பகுதியில் உள்ள உறவினர் அன்சில் (28) என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மதிய விருந்தை முடித்து விட்டு அருகில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு சென்றுள்ளனர். உடன் அன்சில் குடும்பத்தினரும் சென்றனர்.

புதுமண தம்பதி ஆற்றின் கரையோரம் இருந்த பாறையில் மேல் நின்று ‘செல்பி’ எடுக்கும் போது திடீரென ஆற்றுக்குள் தவறி விழுந்தனர்.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்ற அன்சில் ஆற்றில் குதித்தார். ஆனால் அவரும் ஆற்றில் மூழ்கினார். இதனை கரையில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவலயறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆற்றில் மூழ்கிய 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அன்சில் பிணமாக மீட்கப்பட்டார். ஆனால் புதுமண தம்பதி உடல்கள் கிடைக்கவில்லை. இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

காலையில் மீண்டும் தேடிய போது புதுமண தம்பதி உடல்கள் பாறை இடுக்கில் சிக்கி இருந்ததை கண்டுபிடித்தனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக உடல்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுதொடர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர். ‘செல்பி’ எடுக்கும் ஆசையில் புதுமண தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

More in இந்தியா

To Top