தொடர்ந்து வரும் ஓபன் பேட்மிண்டன் தொடர்!

ஜப்பானின் ஒஸாகா நகரில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் கால்இறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்தை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19-21,21-9, 21-9 என்ற செட் கணக்கில் பிரணாய் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் கால்இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னனி வீரரான லக்‌ஷயா சென் ஜப்பானின் கன்டா சுன்யேமாவை எதிர்கொண்டார். இதில் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் சென் எளிதாக வென்று கால்இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை டென்மார்க்கின் லாஸ் மோஹிதே- ஜெப்பே பே இணையை எதிர்கொண்டது. இதில் 21-17, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இந்திய இணை கால்இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

RELATED ARTICLES

Recent News