இந்தியா
6 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்ததன் பேரில் மாநில காவல்துறையுடன் இணைந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login