Connect with us

Raj News Tamil

உணவகத்தில் தாக்குதல்…9 பேர் பலி…சோமாலியாவில் நடந்த பயங்கரம்

உலகம்

உணவகத்தில் தாக்குதல்…9 பேர் பலி…சோமாலியாவில் நடந்த பயங்கரம்

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் கடற்கரை உணவகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய இந்த தாக்குதல் சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது.

இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். உணவகத்தில் இருந்த 84 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு அல்-கெய்தாவின் கிழக்கு ஆப்பிரிக்காவின் இணை நிறுவனமாக அல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளது.

சம்பவ நடந்த இடத்தில் ராணுவம் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top