Connect with us

Raj News Tamil

மனச்சாட்சியே இல்லையா? சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 2 ஆசிரியர்கள் கைது!

இந்தியா

மனச்சாட்சியே இல்லையா? சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 2 ஆசிரியர்கள் கைது!

பழங்குடியின சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு அசிரியர்கள் கைது.

ஒடிசா மாநிலத்தில் 11 வயது பழங்குடியின மாணவி அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 9-ந்தேதி பள்ளியின் தலைமை ஆசிரியரும் மற்றொரு ஆசிரியரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து மாணவி பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. சிறுமிக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மாணவிக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று பெற்றோரிடம் கூறி உள்ளனர். இதுதொடர்பாக பெற்றோர் மாணவியிடம் விசாரித்துள்ளனர். பிறகு மாணவி நடந்ததை கூறி உள்ளார்.

இது குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

More in இந்தியா

To Top