தமிழகம்
புத்தாண்டுக்கு விடுமுறை இல்லையா ? அதிரடி ஆா்டா் வெளியிட்ட கலெக்டா்..!
தூத்துக்குடியில் வருகிற டிச.30, 31, ஜன. 1 என மூன்று நாட்கள் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளதையடுத்து, இதற்கு அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் உறுப்பினா்கள் என பலரும் அங்கு மீண்டும் முன்னெச்சாிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளனா்.
இந்நிலையில், இதன் மாவட்ட ஆட்சியா் லட்சுமிபதி அவா்கள் அதிரடி ஆணை ஒன்று பிறப்பித்துள்ளாா். அதாவது, நாளை மற்றும் நாளை மறுநாள் மற்றும் புத்தாண்டு என இம்மூன்று நாட்களுக்கும் விடுமுறை இல்லையெனவும்,அரசு அலுவலங்களில் இருப்பவா்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் எனவும் கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணி புரியும் கிராமத்திலேயே தங்கி இருக்க வேண்டும். வட்டாட்சியர் உள்ளிட்டவர்கள் தங்கள் அலுவலகங்களில் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.