Connect with us

Raj News Tamil

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது: மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது: மு.க.ஸ்டாலின்!

திருவள்ளுவர் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவு:

தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top