Connect with us

Raj News Tamil

பொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது : வடகொரியா அதிபர் உத்தரவு

உலகம்

பொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது : வடகொரியா அதிபர் உத்தரவு

வடகொரியாவின் தற்போதைய அதிபராக கிம் ஜாங்-வுன் உள்ளார். அங்கு விசித்திரமான சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ளன.

இந்தநிலையில், வடகொரிய நாட்டில் வசிக்கும் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தந்தை கிம் ஜாங்-இல்லின் பத்தாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, டிசம்பர் 17ஆம் தேதி முதல் 11 நாள்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த 11 நாட்களுக்கு மக்கள் யாரும் சிரிக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சத்தம் போட்டு அழக் கூடாது. 11 நாள்களுக்குப் பிறகுதான் அவரது இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்றும் மிகக் கொடுமையான தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in உலகம்

To Top