Connect with us

Raj News Tamil

2 நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது!

தமிழகம்

2 நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது!

அடுத்த 2 நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,

கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்தியப் பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் துவங்கக்கூடும். வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலுக் குறைந்து காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top