Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

ஒடிசா ரயில் விபத்துக்கு இதுதான் காரணம்…வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியா

ஒடிசா ரயில் விபத்துக்கு இதுதான் காரணம்…வெளியான அதிர்ச்சி தகவல்

ஒடிசா மாநிலத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ரயில்வே அதிகாரிகள் நடத்திய முக்கிய விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளி வந்துள்ளது.

சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு உடனடியாக ரத்து செய்யப்பட்டதால் வேகமாக வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top