தமிழகம்
பிளேடால் வயிற்றை கிழித்து தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே மேலக்கூனியூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பிச்சம்மாள் (வயது 67). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
பிச்சம்மாள் தனது கணவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். பிச்சம்மாள் கடந்த சில ஆண்டுகளாக குடல் இறக்கம் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். பலமுறை சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகாததால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று பிச்சம்மாளுக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் வலியால் துடித்த அவர் வீட்டில் இருந்த பிளேடால் தனது வயிற்றை தானே கிழித்து கொண்டார். உயிருக்கு போராடிய பிச்சம்மாளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு பிச்சம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.