தமிழகம்
சென்னையில் நுழைந்தது கொரோனா….இருவருக்கு தொற்று உறுதி
சீனாவில் அதிகரித்து வரும் BF 7 புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவ தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது.
பிஎஃப் 7 அதிகரித்து வரும் நாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை BF 7 புதிய வகை கொரோனா தொற்று பரவல் இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login