Connect with us

Raj News Tamil

கோயம்பேடு அருகே ஆம்னி பஸ் மோதி இன்ஜினியர் பலி!

தமிழகம்

கோயம்பேடு அருகே ஆம்னி பஸ் மோதி இன்ஜினியர் பலி!

கோயம்பேடு அருகே ஆம்னி பஸ் மோதி சாப்ட்வேர் இன்ஜினியர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநின்றவூர் ராஜா குப்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி அவரது மகன் கலையரசன் இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் கோயம்பேடு பகுதியிலிருந்து இருந்து திருவேற்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஆம்னி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய உடன் கீழே விழுந்த கலையரசன் மீது ஆம்னி பஸ் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

உடலை மீட்ட கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரீத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

More in தமிழகம்

To Top