“அந்த பெண்ணிடம் என்ன செஞ்ச” – முஸ்லீம் இளைஞரை தாக்கிய கும்பல்! கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் கிராமத்தை சேர்ந்தவர் செபாஸ். இசுலாமிய சமூகத்தை சேர்ந்த இவர், அப்பகுதியில் உள்ள எஸ்.என். கல்லூரியில், முதுகளைப் பட்டம் படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 3-ஆம் தேதி அன்று, தனியாக வந்துக் கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல், வழிமறித்துள்ளன.

மேலும், பெண்ணிடம் ஆபாசமாக நடந்துக் கொண்டதாக கூறி, செபாஸை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வந்தது. இவ்வாறு இருக்க, செபாஸின் தரப்பில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.

அதில், எந்தவொரு பெண்ணிடமும் செபாஸ் தவறாக நடந்துக் கொள்ளவில்லை என்றும், இஸ்லாமியர் என்ற காரணத்திற்காகவே அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், செபாஸை தாக்கிய 6 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News