Connect with us

Raj News Tamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சிறப்பு குழு அமைத்தது மத்திய அரசு!

இந்தியா

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சிறப்பு குழு அமைத்தது மத்திய அரசு!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் ஜனாதிபதி தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவித்தார்.

இதனால் இக்கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். தொடர்ந்து, அதன் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

More in இந்தியா

To Top