தமிழகம்
புதிதாக இணையும் ஒரு கோடி உறுப்பினர்கள் – திமுக அரசின் பிரம்மாண்ட முன்னெடுப்பு!
திமுக கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சரும், திமுக கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துக் கொள்ள இருந்தார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு கோடி புதிய உறுப்பினர்களை இணைக்கும் முயற்சியாக, உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற திட்டம் திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சென்னை கொளத்தூரில் நாளை இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள், கழகத்தில் இணைய விரும்பும் இளைஞர்களின் வீடுகளுக்கு சென்று, உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login