ரேஷன் அரிசி கடத்தி வந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே சாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மாசி. இவர் தனது வீட்டில் இருந்து காளையார் கோயில் செல்வதற்காக, முடிதாளை சேர்ந்த லூர்து மேரியை தனது இருசக்கர வாகனத்தில் பின்னால் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது, திறந்த வெளி சிறைச்சாலை அருகே செல்லும் போது எதிரே அதிவோமாக வந்த கார் மோதிய விபத்தில் அம்மாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் காரை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரை சேர்ந்த தமிழ்மணி மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த லூர்து மேரி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த காளையார்கோயில் காவல் நிலைய போலீசார் உயிரிழந்த அம்மாசியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த இருவனயும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் காரை ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் சேர்ந்த தமிழ்மணி என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்ததும், காரில் சுமார் 1 டன் எடையுள்ள மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து விபத்து ஏற்படுத்திய கார் மற்றும் ரேஷன் மூடைகளை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரேஷன் அரிசி கடத்தி வந்த கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி குள்ளாக்கியது.

RELATED ARTICLES

Recent News