INDIA – என்ற பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்த தடையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி

எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், எதற்காக இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறீர்கள்? தேர்தல் விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டு இருந்தால் தேர்தல் ஆணையத்தில் சென்று முறையிடுங்கள்.

உங்களின் விளம்பரத்திற்காக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

RELATED ARTICLES

Recent News