Connect with us

Raj News Tamil

உடல் உறுப்பு தானம்: தேனி நபருக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

தமிழகம்

உடல் உறுப்பு தானம்: தேனி நபருக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேலுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.

இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு மற்றும் பாராட்டு தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் வசித்த வந்த அரசு ஊழியர் வடிவேல் (37) இறக்கும் முன்பு உடல் உறுப்பு தானம் செய்திருந்தார். அவர் கடந்த 23-ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

More in தமிழகம்

To Top