Connect with us

Raj News Tamil

இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான் ! ஜி 20 மாநாடு தான் காரணமா ?

உலகம்

இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான் ! ஜி 20 மாநாடு தான் காரணமா ?

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒருமித்த கருத்தோடு ஜி20 டெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படும் நிலையில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோரை தவிர்த்து அனைத்து தலைவர்களும் டெல்லியில் கூடியிருந்தனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய பிரதமர் மோடி 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுடன், இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் வாழ்த்து, நன்றி தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ”நாட்டிற்கு உலகின் டாப் 20 தலைவர்கள் வருகை தரும்போது, அது அந்த நாட்டிற்கு தான் பெருமை. இதன்மூலம் இந்திய பொருளாதாரம் இன்னும் அதிகமாக பயனடையும்” என்று கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top